topic
stringclasses
40 values
poem
stringlengths
0
171
explanation
stringlengths
4
700
paal
stringclasses
3 values
iyal
stringclasses
8 values
நாலடியார் - 40.காம நுதலியல்
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி.
முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது).
காமத்துப்பால்
இன்ப வியல்
நாலடியார் - 40.காம நுதலியல்
கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும் என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி.
பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலையையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது).
காமத்துப்பால்
இன்ப வியல்